சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – ரசிகர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
சென்னையில் அக்.8ம் தேதி நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை காண வரும் ரசிகர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி:
13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி துவங்கியுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியா அணியினரும், இந்திய அணியினரும் மோதி கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில், இந்திய அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்கள் இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நேரடியாக காணவிருக்கும் நிலையில் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2 நாட்களில் பள்ளிகள் திறப்பு – முடிவுக்கு வரும் விடுமுறை!
மேலும், ரசிகர்கள் யாரும் கிரிக்கெட் மைதானத்திற்குள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்ல கூடாது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல், ரசிகர்களை இரண்டு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.