தமிழகத்தில் 2 நாட்களில் பள்ளிகள் திறப்பு – முடிவுக்கு வரும் விடுமுறை!

0
தமிழகத்தில் 2 நாட்களில் பள்ளிகள் திறப்பு - முடிவுக்கு வரும் விடுமுறை!
தமிழகத்தில் 2 நாட்களில் பள்ளிகள் திறப்பு - முடிவுக்கு வரும் விடுமுறை!
தமிழகத்தில் 2 நாட்களில் பள்ளிகள் திறப்பு – முடிவுக்கு வரும் விடுமுறை!

தமிழகத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்க இன்னும் 2 நாட்களே உள்ளது.

விடுமுறை :

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கடந்த செப்.15ஆம் தேதி தேர்வு தொடங்கியது. பிறகு வகுப்பு மற்றும் பாடவாரியாக 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவடைந்த பிறகு செப்டம்பர் 28 முதல் அக்.02 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை மிக குறுகிய நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் இதனை நீட்டிக்க பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. ஆசிரியர்களுக்கு வினாத்தாள் மதிப்பீடு பணி உள்ளது. இதனை முடிக்க கூடுதல் விடுமுறை தேவை என கூறினர்.

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்காதது ஏன்? முன்னாள் அமைச்சர் அரசிடம் கேள்வி!

இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றியமைக்கப்பட்டது. 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.09 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 6 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக 1 – 5ம் வகுப்புகளுக்கான இந்த விடுமுறை இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ளது. இதனையடுத்து திங்கட்கிழமை (அக்.09) வழக்கம் போல வகுப்புகள் தொடங்கப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!