கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி – முதல்வர் அறிவிப்பு!

0
கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி - முதல்வர் அறிவிப்பு!
கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி - முதல்வர் அறிவிப்பு!
கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி – முதல்வர் அறிவிப்பு!

கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு இருந்த தடையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிய அனுமதி:

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியின் போது பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கும் இஸ்லாமிய பெண்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும்போது ஹிஜாப் அணிவதை தவிர்க்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதுமே இஸ்லாமிய சமூகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு – வலுக்கும் கோரிக்கை!

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்ற நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் போது இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இருந்த தடையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கூடிய விரைவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கான வழிவகை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!