தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயிலை கருத்தில் கொண்டு 2023 – 2024 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் நிலவும் கோடை வெப்பத்தால் மக்கள் வெயிலில் தலைகாட்ட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். சில இடங்களில் அதிக வெப்பத்தால் பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இந்த வெப்பம் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் அறிவிக்கப்பட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
விஜய் டிவி அவார்ட் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி கோபிக்கு விருது இல்லை? கொந்தளிப்பில் ரசிகர் கூட்டம்!
இதற்கு மத்தியில் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விடுக்கும் கோரிக்கையில் வெயில் மக்களை வட்டி வதைத்து வருகிறது. அத்துடன் கொரோனா தொற்று பரவலும் வேகமெடுக்கிறது. அதனால் பள்ளிகள் திறப்பை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.