IPL 2025: மும்பை அணியில் தொடருவாரா ரோஹித் ஷர்மா?? வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதாவது ரோகித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் தக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோகித்துடன், ஹர்திக் பாண்டியா, சூர்ய குமார் யாதவ், பும்ரா உள்ளிட்டோரையும் அந்த அணி தக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ரோஹித் சர்மா IPL தொடரில், மும்பை அணியைத் தவிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். அப்போது 2009இல் அந்த அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.


























