மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா.. ரோஹித்தை நீக்கிய காரணம் இது தான்??
IPL 2024 தொடருக்கான எதிர்பார்ப்புகள் தற்போது முதலே அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் டிரேடிங் மற்றும் தக்கவைப்பு வீரர்கள் விவரம் வெளியான நிலையில், யார் எந்த அணியில் அங்கம் வகிக்கின்றனர் என பட்டியல் வெளியானது. அதன்படி, ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்தார்.
Join Our WhatsApp Group” for Latest Updates
அதனை தொடர்ந்து தற்போது MI அணிக்கு அவரகேப்டனாக செயல்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 முதல் 11 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா இனி அணியில் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டும் செயல்படுவார். இந்த 11 ஆண்டுகளில் 5 முறை கோப்பை வென்று கொடுத்து IPL அரங்கில் சிறந்த கேப்டனாக வலம் வந்த ரோஹித் திடீரென நீக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கூகுள் நிறுவனத்தில் ஒரேநேரத்தில் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் – சுந்தர்பிச்சை விளக்கம்!!
இதன் காரணமாக ரோஹித் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே, இது எங்களின் முயற்சியின் ஒரு பகுதி. எதிர்காலத்துக்கு தயாராவதை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் IPL தொடரின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.