அரையாண்டு வினாத்தாளில் நடந்த குழப்பம் – கல்விஅதிகாரி விளக்கம்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில் வினாத்தாளில் நடந்துள்ள குழப்பம் குறித்து செய்திகள் வெளியாகி உள்ளது.
வினாத்தாள் குழப்பம்:
தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11ஆம் தேதி முதல் நடக்க இருந்த நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் டிசம்பர் 13ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பொது வினாத்தாள் முறையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட வாரியாக கல்வி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து பள்ளிகளுக்கு விநியோகிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு வியாழக்கிழமை அன்று நடத்தப்பட்டது.
கூகுள் நிறுவனத்தில் ஒரேநேரத்தில் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் – சுந்தர்பிச்சை விளக்கம்!!
தேர்வில் மொத்தம் 90 மதிப்பெண்களுக்கான வினாக்களும், 10 செய்முறை மதிப்பெண்களும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 55 மதிப்பெண்களுக்கு மட்டுமே வினாத்தாள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. மீதமுள்ள 35 மதிப்பெண்களுக்கான கேள்வித்தாள் மாணவர்கள் தேர்வு எழுதும் போதே அச்சிடப்பட்டு ஈமெயிலில் அனுப்பி ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் வினாத்தாளை சரியாகத்தான் நகலெடுக்க கொடுத்ததாகவும், அச்சகத்தில் அதை பிரிண்ட் செய்யாமல் விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.