ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது? அரசாணை வெளியீடு!
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்களுக்கும் போட்டித்தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதத்தில் அந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் தான் நிரப்பப்படுகின்றன. ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் நியமிக்கப்படாமலே உள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களை கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பலாம் என அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், இதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
இதனிடையே, தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 சம்பளமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளமும், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்விற்கான தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் போட்டித்தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தகுதி தேர்வாணையம் அறிவித்திருந்தது. அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற உடனேயே ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வாகிவிட முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்விற்கு பிறகு வைக்கப்படும் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும். இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.