தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கும் தேதி இது தான்.. வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் நிலையில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறக்கும் தேதி குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் நிலையில், விரைவில் விடுமுறை விடப்பட இருக்கிறது. இந்நிலையில் செமஸ்டர் பின் கல்லூரிகள் திறக்கும் தேதி குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் படி அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.
இந்திய கடற்படையில் வேலை வேண்டுமா? உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
இந்த அறிவிப்பு அரசு உதவிபெறும் தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான சுற்றறிக்கையின் படி ஜூன் 19 ஆம் தேதி அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் தொடங்கப்பட இருக்கும் நிலையில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
Exams Daily Mobile App Download