இந்தியாவில் மே மாதம் மழைப்பொழிவு எப்படி இருக்கும்? வானிலை மையம் அறிவிப்பு!
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் மே மாதத்தில் மழைப்பொழிவின் அளவு மற்றும் வெப்பம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்தான அறிவிப்பை தற்போது இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மழைப்பொழிவு
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில் தற்போது மே மாதத்தில் வெப்பநிலை மற்றும் மழையின் அளவு எவ்வாறு இருக்கும் என்பது குறித்தான அறிவிப்பை தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, மே மாதத்தில் கிழக்கு மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் வடகிழக்கு மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் எனவும், வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் வெப்பம் இயல்பை விட குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கும் தேதி இது தான்.. வெளியான முக்கிய தகவல்!
அதாவது, பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம், உத்தர பிரதேஷ், கடலோர ஆந்திர பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர், கிழக்கு மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளின் இயல்பை விட அதிகமான வெப்பம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது அதிகமான வெப்பநிலை நிலவும் எனவும், சில சமயங்களில் மழை பொழிவும் இயல்பாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.