வாட்ஸ் அப்பில் வரும் Spam Call – பயனர்கள் புகார்.. மத்திய அரசு நோட்டீஸ்!
வாட்ஸ் ஸ்பேம் அழைப்புகள் தொடர்பாக பேசிய இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக வாட்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
ஸ்பேம் அழைப்புகள்:
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மலேசியா, இந்தோனேசியா,சர்வதேச நாடுகளில் இருந்து ஸ்பேம் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறும் நோக்கில் மோசடி செய்யும் நபர்களிடம் இருந்து ஸ்பேம் அழைப்புகள் வருகிறது.
மாநிலத்தில் இடமாற்ற வரம்பு 15% ஆக அதிகரிப்பு – 30,000 அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்ய வாய்ப்பு!
அதனால் வாட்ஸ்அப் பயனர்கள் சர்வதேச ஸ்பேம் அழைப்புகளை எடுக்க வேண்டாம். மேலும் அழைப்பு குறித்து இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தியது. மேலும் அழைப்புகள் குறித்து பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்தார்.