தமிழகத்தில் தொழில்துறை மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு – புதிய அமைச்சர் பேட்டி!

0
தமிழகத்தில் தொழில்துறை மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு - புதிய அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் தொழில்துறை மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு - புதிய அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் தொழில்துறை மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு – புதிய அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் தொழில் துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டி. ஆர்.பி.ராஜா அதிக எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு என தெரிவித்துள்ளார்.

புதிய வேலைவாய்ப்புகள்

தமிழக அமைச்சரவையில் 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு புதிதாக மன்னார்குடி எம்எல்ஏ-வும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் அமைச்சராக பொறுப்பேற்ற அவர் தொழில் துறை மூலம் அதிக எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்பில் வரும் Spam Call – பயனர்கள் புகார்.. மத்திய அரசு நோட்டீஸ்!

மேலும் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பல துறைகளில் தமிழகம் பின்னடைவை சந்தித்தது. அதில் இருந்து மீண்டு அதிக அளவில் முதலீடு வர வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் இருந்து இன்னும் வேகத்துடன் தொழில்துறையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பணிகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார். தொழில் முதலீடுகள் குறித்து மே 23 ஆம் தேதி சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் செல்ல இருக்கிறார். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!