வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 41,42,586 ரூபாய் அபராதம் – தடை செய்யப்பட்ட Content ஐ நீக்க தவறியதால் அதிரடி!
கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ராணுவத் தணிக்கை விதிகளுக்கான உள்ளடக்கத்தை whatsapp நிறுவனம் நீக்க தவறியதால் 41,42,58 ரூபாய் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப்:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான whatsapp நிறுவனம், தனது பயனாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. மேலும், whatsapp செயலியின் மூலமாகவே தேவையில்லாத பல்வேறு கருத்துக்கள் பரவுவதன் காரணமாக இது போன்ற தவறான தகவல்களை பரப்பும் பயனாளர்களின் கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ரஷ்யா உக்ரைன் போரின் போது ரஷ்யா கடுமையான ராணுவ தணிக்கை விதிகளை அமல்படுத்தியது.
தமிழகத்தில் நாளை (மே.21) கரண்ட் போகாது – மகிழ்ச்சியில் மக்கள்.. வேலைய ரிலாக்சா பண்ணுங்க!
இந்த சட்டத்தின் படி ரஷ்ய ராணுவ தணிக்கை விதிகளை பரப்பும் google, விக்கிபீடியா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான whatsapp நிறுவனம் இந்த தடை செய்யப்பட்ட ரஷ்யாவின் ராணுவ தணிக்கை விதிகளை அகற்றவில்லை என தற்போது ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. இதனால், whatsapp நிறுவனத்திற்கு 4 மில்லியன் ரூபிள் வரை அதாவது ₹41,42,586 ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download