தமிழகத்தில் நாளை (மே.21) கரண்ட் போகாது – மகிழ்ச்சியில் மக்கள்.. வேலைய ரிலாக்சா பண்ணுங்க!
தமிழகத்தில் நாளை (மே.21) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. அதனால் மின் விநியோகம் தடை செய்யப்படாது என்று கூறப்படுகிறது.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது நிலவும் கோடை வெப்பத்தால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின்விசிறி, குளிர்சாதன பெட்டி, ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் பாடத்தில் 36000 பேர் பெயில் – வெளியான ஷாக் ரிப்போர்ட்!
இதன் காரணமாக மின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் மின் நுகர்வு 423 மில்லியன் யூனிட்களாக உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மின்வாரியம் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மட்டும் மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்த நிலையில் நாளை (மே.21) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் பராமரிப்பு பணிகள் நடைபெறாது. இதனால் மின் விநியோகம் தடை செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.