10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் பாடத்தில் 36000 பேர் பெயில் – வெளியான ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 20) வெளியான நிலையில் அதில் தமிழ் பாடத்தில் 36000 பேர் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளுக்கு நேற்று (மே 19) தேர்வு முடிவுகள் வெளியானது. அவ்வாறு வெளியான முடிவின் படி, 9.14 லட்சம் பேர் தேர்வு எழுதியதில், 8.35 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் தமிழ் மொழியில் ஒரு மாணவி தவிர யாரும் சதம் எடுக்கவில்லை. அது மட்டுமில்லாமல் தமிழ் பாடத்தில் சுமார் 36000 மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. ஆனால் தொடரும் போராட்டம் – மாநில அரசு ஊழியர்களுக்கு சிக்கல்!
அதாவது தமிழ் பாடத்தில் 4.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தோல்வி அடைந்த மாணவர்கள் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக எடுத்தவர்கள். அவர்களின் தாய்மொழியும் தமிழ் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆங்கில பாடத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால் இது குறித்து அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.