பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. ஆனால் தொடரும் போராட்டம் – மாநில அரசு ஊழியர்களுக்கு சிக்கல்!
மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பலன்கள் தொடர்பாக சிக்கல்கள் எழுந்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தினால் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் குறைவாக உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டம் தான் மீண்டும் அமலுக்கு வர வேண்டும் என்று அனைத்து தரப்பு ஊழியர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.
ரூ.2,40,000/- சம்பளத்தில் ECIL நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
2022 நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று பூபேஷ் பாகேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்போது ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் அல்லது புதிய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
அவ்வாறு பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்த 84% ஊழியர்களுக்கு அதனை அமல்படுத்த மத்திய அரசிடம் 2004 முதல் 2022ம் ஆண்டு வரை செலுத்திய ஓய்வூதிய தொகை ரூ.17,000 ஐ திருப்பி செலுத்த மத்திய அரசு மறுத்து விட்டது. இதனால், ஊழியர்கள் அனைவரும் தற்போது செய்வதறியாமல் சிக்கலில் மாறியுள்ளனர்.
Exams Daily Mobile App Download