ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை – விரைவில் வரும் நல்ல செய்தி!

0
ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை - விரைவில் வரும் நல்ல செய்தி!

இந்தியாவில் வங்கி ஊழியர்கள் வாரத்தில் 5 நாள் வேலை என்ற கோரிக்கையை வைத்துள்ள நிலையில், இது குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

வங்கி ஊழியர்கள்

இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை விடப்படும். ஆனால் அவர்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. மேலும் வங்கி ஊழியர் சங்கங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருக்கின்றன.

ரூ.2,40,000/- ஊதியத்தில் NBCC நிறுவனத்தில் வேலை – 90+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

இதனை அவர் பரிசீலனை செய்து முடிவு எடுத்து, இந்திய வங்கிகள் சங்கத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பது குறித்து மத்திய அரசு விரைவில் சாதகமான முடிவை எடுக்கும் என சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், பொதுத்துறை வங்கி ஊழியர்களின் ஊதியத்தை 17 சதவீதம் உயர்த்த இந்திய வங்கிகள் சங்கம் கடந்த ஆண்டு வங்கி ஊழியர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!