தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு – ஜூலை 21 முதல் துவக்கம்!
தமிழகத்தில் ஒரு வருடத்தில் 4 முறை வாக்காளர் சரிபார்ப்பு பணி நடத்தப்படுகிறது. அந்த வகையில் வரும் 21 ஆம் தேதி முதல் வாக்காளர் சரிபார்ப்பு பணியை தொடங்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் சரிபார்ப்பு:
தமிழகத்தில் மொத்தமாக 10,39,316 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வாக்காளர் அட்டை வாக்களிப்பதை தாண்டி பிற பணிகளுக்கும் முக்கிய ஆவணமாக கருதப்படுவதால் அப்போது வாக்காளர் அட்டையில் தேவையான மாற்றங்களை செய்து அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்றைய டிஜிட்டல் உலகில் வாக்காளர் அட்டை பெறுவது மிகவும் எளிதான நடைமுறை ஆகிவிட்டது.
தமிழகத்தில் கருக்கலைப்பு செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வாரியம் – அரசாணை வெளியீடு!
முன்பெல்லாம் வாக்காளர் அட்டை பெறுவதற்கு 18 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். இந்த நடைமுறை மாற்றப்பட்டு தற்போது 17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு மாதம் ஜூலை 21 ஆம் தேதி வாக்காளர் சரிபார்ப்பு பணி தொடங்க உள்ளது.