தமிழகத்தில் கருக்கலைப்பு செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வாரியம் – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் கருக்கலைப்பு செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வாரியம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கருக்கலைப்பு செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வாரியம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கருக்கலைப்பு செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வாரியம் – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது குறித்து முடிவு செய்ய, அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி வாரியம் செயல்படும் என அரசாணை வெளியாகி இருக்கிறது.

அரசாணை வெளியீடு

தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் தனி வாரியம் குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி அரசாணை வெளியிட்டு இருக்கிறார். அதில் மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளை பரிசோதனை செய்து சிசுவைக் கலைப்பதற்கான கருத்துகளை அந்த வாரியம் மூன்று நாள்களுக்குள் வழங்கும்.

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பம் நிரப்பும் முறை – என்னென்ன ஆவணங்கள் தேவை?

கருக்கலைப்பு செய்ய போதிய காரணம் இல்லை என்றால் விண்ணப்பங்களை நிராகரிக்கவும் அந்த வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது. தற்போது மாநிலத்திற்கு ஒரே ஒரு வாரியம் இருப்பதால், விண்ணப்பங்கள் மீது உரிய நேரத்தில் முடிவெடுக்க முடியாத நிலை இருக்கிறது. அதனால் மாநிலம் முழுவதும் 32 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் தனித்தனியே கருக்கலைப்புக்கான அனுமதி வழங்கும் வாரியத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!