விஷ்ணுகாந்த் & சம்யுக்தா விவாகரத்து – காரணம் இதுவா? வெளியான அப்டேட்!
விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் விவாகரத்து வாங்கி இருக்கும் நிலையில், அது குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர்.
விவாகரத்து சம்பவம்
விஜய் டிவியில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. அவர் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்த் அவர்களை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் அவர்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி வெளியானது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் – அமைச்சரின் சந்திப்பால் போராட்டம் நிறைவு!
இது குறித்து விஷ்ணுகாந்த் கூறுகையில், சம்யுக்தா தவறான வழியில் செல்வதாக அவர் தெரிவித்தார். மேலும் சம்யுக்தா குறித்த பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சம்யுக்தாவும் விவாகரத்திற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார். விஷ்ணுகாந்த்தை நம்பி நான் ஏமாந்துவிட்டேன், அவருக்கும் எனக்கும் 10 வருஷம் வித்தியாசம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லாமல் மறைமுகமாக பேசி இருப்பது மேலும் புகைச்சலை கிளப்பி உள்ளது. மேலும் இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.