டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் – அமைச்சரின் சந்திப்பால் போராட்டம் நிறைவு!
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என ஐந்து நாட்களாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அமைச்சரின் சந்திப்பால் போராட்டம் நிறைவு பெற்றுள்ளது.
டெட் தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் கடந்து ஐந்து நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிரடி பணி மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!
இந்நிலையில், தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடம் அமைச்சர் பொன்முடி கலந்து பேசினார். அதாவது, பெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவது தொடர்பான இந்த விவரம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும், கூடிய விரைவிலேயே அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
கட்டாயமாக பெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்த நிலையில் ஐந்து நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தற்போது போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.
Exams Daily Mobile App Download