தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்கிய வலியுறுத்தல் – காவல்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் கொண்டு செல்லும் முறை மற்றும் கரைக்கும் முறை குறித்த முழு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி:
தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் விநாயகர் ஊர்வலம் மற்றும் கரைக்கும் முறை குறித்தான அறிவிப்பினை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் காவல்துறையினர் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகைக்கு 3 லட்சம் அரசு ஊழியர்கள் விண்ணப்பம் – அறிவிப்பு வெளியீடு!
இது மட்டுமல்லாமல், விநாயகர் சதுர்த்தி முடிவடைந்த பிறகு ஒதுக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் களிமண், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் தெர்மாகோல் ஆகிய கலவைகலால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலையங்களில் கரைக்கக் கூடாது. இந்த அறிவிப்பை மீறும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.