மீனாவிற்காக குரல் கொடுக்கும் ஸ்ருதி.. விரைவில் ரோகிணிக்கு END CARD – “சிறகடிக்க ஆசை” அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், ஸ்ருதி ரவி குடும்பத்துடன் ஒன்றாக வாழ போவதாக முடிவான நிலையில், மீனாவிற்கு ஆதரவாக இனி ஸ்ருதி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி அம்மா இனிமேல் ஸ்ருதி இந்த வீட்டில் தான் இருப்பார் என விஜயாவிடம் சொல்கிறார். ஆனால் முத்து அதெல்லாம் முடியாது என சொல்ல, அண்ணாமலை முத்துவை சமாதானம் செய்கிறார். உடனே முத்து சம்மதிக்க, ஸ்ருதி வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறார். விஜயா ரோகிணி வந்ததற்கு மீனாவை அப்படி வேலை வாங்கிய நிலையில், மற்றொரு பணக்கார மருமகள் ஸ்ருதி என்ட்ரி கொடுத்து இருப்பதால், மீனாவை திட்டிக் கொண்டே இருக்கிறார்.
அது ஸ்ருதிக்கு பிடிக்காமல் இருக்க, அவர் மீனாவிற்கு சப்போர்ட் செய்கிறார். அதனால் ரோகிணிக்கு பிரச்சனை வருகிறது. உடனே ரோகிணி ஸ்ருதி இடையே சண்டை வர, மலேசியாவில் உன் அப்பா என்ன செய்கிறார். ஹோட்டல் பெயர் சொல்லு என கேட்டு, ரோகிணியை ஸ்ருதி ஆப் செய்கிறார். இதே நிலைமையில் சென்றால் விரைவில் ரோகிணி மாட்டிக் கொள்வார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.