தனி குடித்தனம் செல்லும் முத்து.. காசில்லாமல் கஷ்டப்படும் குடும்பம் – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், மனோஜ் பிரச்சனை பெரிதாகிவிட முத்து விடாமல் ரோகிணியை கிண்டல் செய்கிறார். அதனால் தனி குடித்தனம் செல்ல போகிறேன் என முத்து முடிவு செய்கிறார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜ் வீட்டை ஏமாற்றியது ரோகினியால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஆனால் தன்னுடைய அம்மா சொன்ன காரணத்தால் ரோகிணி மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். இந்நிலையில் வீட்டில் முத்து விடாமல் மனோஜை கிண்டல் செய்கிறார். அதனால் கோவப்பட்ட ரோகிணி தனி குடித்தனம் போக முடிவு செய்கிறார்.
ஆனால் தன்னுடைய ஆசை மகன் மனோஜை தனியாக விட முடியாது என்பதால் விஜயா அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். அண்ணாமலையும் எதுவும் பேசாமல் இருக்க, உடனே முத்து நான் தனியாக செல்கிறேன் என சொல்கிறார். முத்து வெளியே செல்ல குடும்பத்தின் தேவைக்கு காசு கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இரண்டு மருமகள்களும் வேலை செய்யாமல் இருக்க, விஜயா எல்லா வேலைகளும் செய்கிறார். அதனால் முத்து மீனாவின் அருமை குடும்பத்திற்கு புரிய வர இருக்கிறது.