பிப். 29 வரை பள்ளிகளை மூட உத்தரவு – கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகளவில் பனி பொலிவு ஏற்பட்டு வரும் நிலையில் பிப். 29 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜன.15 ஆம் தேதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில பள்ளிகளில் பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ. 50,400/-
அந்த வகையில், டெல்லியில் நாளை வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரப்பிரதேச மாநில அரசு பள்ளிகளுக்கு ஜன.14 ஆம் தேதி வரையிலும், ஹரியானாவில் ஜன.15 வரையிலும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிக மோசமான சூழல் நிலவி வருவதால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி 29 ஆம் தேதி வரை விடுமுறை என பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஜம்மு (DSEJ) தெரிவித்துள்ளது.