ஐஸ்வர்யாவை வெளுத்து வாங்கிய முல்லை.. திருந்துவாரா? “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யாவும் கண்ணனும் எல்லை மீறி நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதை எல்லாம் பார்த்த முல்லை பொறுமை இழந்து பயங்கரமாக திட்டிவிடுகிறார். அதனால் இருவரும் மனம் திருந்துவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வந்த கண்ணனும் ஐஸ்வர்யாவும், ஆடம்பர செலவு செய்வதும், யூடியூப் சேனல் நடத்துவதும் என அவர்களின் சேட்டை எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கிறது. அவர்களை கேட்க யாரும் இல்லாமல் இருக்கும் நிலையில், மூர்த்திக்கு இது குறித்த விவரம் தெரிய வருகிறது. அவர் இனிமேல் கண்ணன் ஐஸ்வர்யா குடும்ப விஷயங்களை பற்றி பேசக் கூடாது என சொல்லி அறிவுரை சொல்ல சொல்கிறார்.
உடனே முல்லை ஐஸ்வர்யாவிடம் சொல்ல, நான் எதாவது செய்கிறோம் மாமாக்கு என்ன என கேட்க, இதுவரை அமைதியாக இருந்த முல்லைக்கு பயங்கர கோவம் வருகிறது. அவர் ஐஸ்வர்யாவிடம் சரமாரியாக கேள்வி கேட்கிறார். அதாவது உனக்கு உடம்பு சரியில்லை என்றால் பணம் கொடுத்து உதவி செய்யமட்டும் குடும்பம் வேண்டும். அறிவுரை மட்டும் சொல்லக் கூடாதா என பயங்கரமாக பேச, ஐஸ்வர்யா வாய் அடைத்து நிற்கிறார். ஐஸ்வர்யா தன்னுடைய தவறை உணருவாரா என்பது அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.