கண்ணனை கடனில் மாட்டிவிடும் ஐஸ்வர்யா.. காப்பாத்துமா குடும்பம்? “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அப்டேட்!

0
கண்ணனை கடனில் மாட்டிவிடும் ஐஸ்வர்யா.. காப்பாத்துமா குடும்பம்?
கண்ணனை கடனில் மாட்டிவிடும் ஐஸ்வர்யா.. காப்பாத்துமா குடும்பம்? "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் அப்டேட்!
கண்ணனை கடனில் மாட்டிவிடும் ஐஸ்வர்யா.. காப்பாத்துமா குடும்பம்? “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அப்டேட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் ஐஸ்வர்யா தனிக் குடித்தனம் சென்றுவிட்ட பின் ஆடம்பர செலவுகளை தேவை இல்லாமல் செய்கிறார். அதனால் கண்ணன் சிக்கலில் சிக்க, அவருக்கு குடும்பம் உதவி செய்யுமா என்பது எல்லாம் அடுத்தகட்ட கதையாக இருக்க போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஒரு மாதம் சம்பளம் மட்டுமே வாங்கிவிட்டு ஆடம்பர செலவுகளை செய்து வருகின்றனர். ஏற்கனவே EMIல் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி கடனில் மாட்டிக் கொள்கின்றனர். மறுபக்கம் மளிகை பொருள்களை வாங்க இருக்கும் பணத்தை எல்லாம் காலி செய்து விடுகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் முல்லை வளைகாப்பிற்கு ஐஸ்வர்யா கண்ணனிடம் பெரிதாக எதாவது செய்ய வேண்டும் என சொல்கிறார்.

கண்ணன் என்ன செய்யலாம் என கேட்க, தங்க நகை வாங்கலாம் என சொல்லி கடைக்கு அழைத்து செல்கிறார். இதற்கு பணம் இல்லை என கண்ணன் சொல்ல, என்னிடம் கிரெடிட் கார்டு இருப்பதாக ஐஸ்வர்யா சொல்கிறார். கண்ணனும் நம்பி செல்ல, முல்லைக்கு மோதிரம் வாங்கிவிட்டு, ஐஸ்வர்யா அவருக்கு கம்மல் வாங்கி கொள்கிறார். கண்ணன் வேண்டாம் என சொல்லியும், ஐஸ்வர்யா கேட்பதாக இல்லை.

ஏற்கனவே EMI கடனில் இருக்கும் கண்ணன் இப்போது இதில் சிக்கிக் கொள்ள இருக்கிறார். அடுத்த மாதம் அவர் எப்படி சமாளிப்பார் என்பது எல்லாம் அடுத்தகட்ட கதையாக இருக்கிறது. மேலும் தற்போது வெளியான தகவலில் கண்ணன் கடன் கட்ட முடியாமல் கஷ்டத்தில் இருக்க, அவர் மூர்த்தியிடம் உதவி கேட்கிறார். அவருக்கு மூர்த்தி உதவி செய்வாரா என்பது எல்லாம் கதையில் வரும் ட்விஸ்ட்டாக இருக்க போகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!