இனியாவால் பிரியும் கோபி-ராதிகா… ஈஸ்வரி திட்டம் என்ன? – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா மீது கோபி மிகுந்த பாசமாக இருக்க, அதையே காரணமாக வைத்து கோபி ராதிகாவை பிரிக்க திட்டமிடுகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், பல பிரச்சனைகளுக்கு பின் கோபி ராதிகாவுடம் பாக்கியா வீட்டில் தங்கி விடுகிறார். இனி தான் கோபிக்கு பாக்கியாவை பற்றியும் ராதிகாவை பற்றியும் தெரிய வர இருக்கிறது. இதற்கிடையில் கோபி இனியா மீது மயூராவை விட அதிகமாக பாசம் வைத்து இருக்கிறார். அது ராதிகாவுக்கு பிடிக்காமல் இருக்கிறது. இதையே காரணமாக வைத்து ஈஸ்வரி மாஸ்டர் பிளான் ஒன்றை போடுகிறார்.
இந்தியாவில் மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகம்? ரிசர்வ் வங்கி விளக்கம்!
அதாவது இனியாவை பகடைக்காயாக வைத்து கோபியை ராதிகாவிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்க முடிவு செய்கிறார். அதனால் இனியாவை கோபியிடம் நெருங்கி பழக விடுகிறார். மகளின் அன்பை முழுமையாக பார்த்த கோபிக்கு ராதிகா மீது வெறுப்பு வர இருவரும் பிரிவார்களா, ஈஸ்வரியின் திட்டம் பழிக்குமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.