அமிர்தாவிற்கு எதிரியாக மாறும் கணேஷ் அம்மா அப்பா.. அடுத்து நடக்க போவது என்ன? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தா-எழில் வாழ்க்கையில் கணேஷ் வர, அவரால் குடும்பத்தில் என்ன பிரச்சனை வரும் என்பது அடுத்த எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், எழில் அமிர்தா காதலித்து கல்யாணம் செய்து தங்களுடைய வாழ்க்கையை வாழ தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாக மீண்டும் அமிர்தாவின் முதல் கணவர் என்ட்ரி கொடுக்கிறார். இதனால் அடுத்து என்ன செய்வது என குடும்பத்தினர் யோசிக்க, கணேஷ் அம்மா அப்பா சுயநலமாக மாறுகின்றனர்.
அவர்கள் கணேஷ் உடன் அமிர்தா சேர்ந்து வாழ வேண்டும் என சொல்ல, பாக்கியா எழில் என்ன செய்வது என தெரியாமல் இருக்கின்றனர். இதுவரை அமிர்தாவிற்கு துணையாக இருந்த அவர்கள் இனிமேல் எழில் அமிர்தா வாழ்க்கைக்கு எதிரியாக மாற இருக்கின்றனர். இதில் பாக்கியா யாருக்கு துணையாக இருப்பார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.