ஜி 20 உச்சி மாநாடு| பள்ளி, கல்லூரிகள் உட்பட அரசு அலுவலகங்கள் 3 நாள் விடுமுறை – டெல்லியில் அதிகரிக்கும் கெடுபிடிகள்!
ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகள் நடக்க உள்ள நிலையில் டெல்லி முழுவதும் அதிகப்படியான கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மூன்று நாள் விடுமுறை:
2023 ஆம் ஆண்டுக்கான ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களிலும் ஜி20 மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி நாட்டின் தலைநகரான டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு ஜி-20 நாடுகளின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், மேலும் பன்னாட்டு நிறுவன அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இதனால் டெல்லி நகர் முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான கெடுபிடிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8 முதல் 10ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – E-KYC விவரங்கள் கட்டாயம்… செப். 30 கடைசி தேதி!
மேலும் எட்டு மற்றும் ஒன்பதாம் தேதிகளில் பள்ளிகளில் பாடங்களை முடிக்கும் விதமாக ஆன்லைன் வகுப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் கல்வித்துறையின் ஊழியர்கள் யாரும் வெளியூர்களுக்கு பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது