அனாதை ஆசிரமத்தில் குழந்தை.. ஜெனிக்கு இரண்டாவது கல்யாணம் – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!

0
அனாதை ஆசிரமத்தில் குழந்தை.. ஜெனிக்கு இரண்டாவது கல்யாணம் -

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுக்க, ஜெனி ஒப்புக் கொள்ளலாமல் இருக்கிறார். அதனால் ஜோசப் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்க்க முடிவு செய்கிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில், ஜெனி குழந்தையுடன் அம்மா வீட்டில் இருக்க, குடும்பத்தில் நடப்பது எல்லாம் அவருக்கு பிடிக்காமல் இருக்கிறது. ஜோசப் குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுக்க முடிவு செய்கிறார். ஆனால் ஜெனி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கு செழியன் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என ஜெனி சொல்கிறார். ஆனால் ஜோசப் இது செழியன் குழந்தையாக இருந்தால், இனிமேல் இதற்கு இந்த வீட்டில் இடம் இல்லை என சொல்கிறார்.

ஜெனிக்கு ஒன்றும் புரியாமல் இருக்க, குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்க்க ஜோசப் முடிவு செய்கிறார். அது மட்டுமில்லாமல் ஜெனிக்கு விவாகரத்து ஆனதும் அவருக்கு நல்ல கிறிஸ்டியன் பையனாக பார்த்து கல்யாணம் செய்து வைக்க இருப்பதாக பேசுகிறார். இதை கேள்வி பட்டதும் ஜெனிக்கு அந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? .. பட்ஜெட்டில் கிடைத்த ஏமாற்றம் – வருத்தத்தில் மக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!