மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறித்து அறிவிப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பெட்ரோல், டீசல் விலை
பரபரப்பான சூழ்நிலையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.1) தாக்கல் செய்யப்பட்டது. இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 6வது பட்ஜெட் ஆகும். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்காது என்பது தெரிந்ததே. ஆனால் பெட்ரோல் டீசல் விலை குறித்து அறிவிப்பு வெளியாகும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
அதாவது கலால் வரியை குறைந்தால் பல்வேறு விளைவுகள் ஏற்படும். அதை சமாளிக்க அரசிடம் நிதி ஆதாரம் இல்லை என்பதால் பெட்ரோல் டீசல் விலை குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் பட்ஜெட்டில் நாட்டின் பண வீக்கம் குறைவாக இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். எனவே 612 நாட்களுக்கு பின் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு கடைசியில் ஏமாற்றமே கிடைத்தது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
போட்டித் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் 1 கோடி அபராதம் – புதிய மசோதா தாக்கல்..