இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் விக்னேஷ் சிவன்? இது தான் காரணம்! ரசிகர்கள் ஷாக்!
தமிழக மக்களிடம் கடந்த சில நாட்களாக அதிகமாக பேசப்படும் செய்தியாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இருக்கிறது. திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி பல கோவில்களுக்கு சென்று வருகின்றனர். அதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நயன்தாரா விக்னேஷ் சிவன்:
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நயன்தாரா. சிறு வயதில் சினிமாவில் வந்து தற்போது பல ஆண்டுகளாக ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து தனக்கொரு தனித்துவத்தை பெற்றவர் நயன்தாரா. அவர் காதல் வாழ்க்கையில் இரண்டு முறை தோல்வியை தழுவினாலும் இறுதியாக விக்னேஷ் சிவனை அவர் தேர்வு செய்தார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஒரு சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இவருவருக்கும் எப்போது திருமணம் என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின் நயன்தாராவின் சொந்த ஊருக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் இப்படி கோவில் கோவிலாக செல்ல என்ன காரணம் என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் இருந்தது. அதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.
சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியல் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!
அதாவது நயன்தாராவின் ஜாதகப்படி மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் என இரண்டும் இருக்கிறது. அதனால் தான் பரிகாரங்கள் செய்வதற்காகவே அவர்கள் எல்லா கோவில்களுக்கும் சென்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நயன்தாராவை இரண்டாவது முறை விக்னேஷ் சிவன் திருமணம் செய்ய இருக்கிறாராம் அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே பிரபல ஜோதிடர் ஒருவர் நயன்தாராவின் திருமண வாழ்வு சிறப்பாக இருக்காது என தெரிவித்து இருக்கிறார். இருவரும் நீண்ட காலம் சேர்ந்து வாழ மாட்டார்கள் என அவர் சொன்னதை கேட்டு ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.