சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியல் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் “கண்ணான கண்ணே” சீரியல் 500 எபிசோடுகளை கடந்து முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் 500 எபிசோடுகள் கடந்த நிலையில் படக் குழுவினர் அந்த வெற்றியை கொண்டாடி இருக்கின்றனர்.
கண்ணான கண்ணே சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் அந்த காலம் முதல் சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். பல வெற்றி சீரியல்கள் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் இன்னும் அந்த சீரியல்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. தற்போது கால மாற்றத்திற்கு ஏற்றார் போல பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன, அந்த வகையில் அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “கண்ணான கண்ணே” சீரியல்.
Exams Daily Mobile App Download
இந்த சீரியல் TRPயில் முதல் 5 இடங்களை பிடிக்கும். இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சந்தோஷமான தருணங்களை படக் குழுவினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் இது குறித்து பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். அதில் ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். சன் டிவி சீரியல் கதை ஒரு பக்கம் இருந்தாலும் சீரியலில் தொடக்க பாடலுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.
கதிரை வெளியே போக சொல்லும் மீனாவின் அப்பா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
அது போல கண்ணான கண்ணே சீரியல் பாடலும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல் தெலுங்கு மொழி சீரியல் ‘பௌர்ணமி’ மற்றும் கன்னட மொழித் சீரியலான ‘மானசரே’ போன்ற சீரியல்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பிரித்திவிராஜ், நிமிக்ஷிதா,ராகுல் ரவி ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இன்னும் பல எபிசோடுகள் இந்த சீரியல் வெற்றிகரமாக செல்ல வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.