கதிரை வெளியே போக சொல்லும் மீனாவின் அப்பா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் வீட்டை விட்டு வெளியே போன சோகத்தில் மூர்த்திக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. அதனால் குடும்பமே வருத்தத்தில் இருக்க கதிர் வந்து பார்க்க வருகிறார். ஆனால் மீனாவின் அப்பா கதிரை வெளியே போக சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை நகர்ந்து வருகிறது. தற்போது கூட்டு குடும்பமாக சந்தோசமாக இருந்த அண்ணன் தம்பிகளுக்கு இடையே பெரிய விரிசல் விழுந்துள்ளது. முல்லைக்கு கடன் வாங்கி மருத்துவம் பார்த்ததால் பெரிய பிரச்சனை வந்துள்ளது. அதனால் மீனாவின் அப்பா, முல்லை அம்மா, தனத்தின் அம்மா என மாறி மாறி அந்த பணத்தை பற்றி பேச உடனே கோவப்பட்ட கதிர் தன்மானம் தான் முக்கியம் என முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார்.
Exams Daily Mobile App Download
இதற்கிடையே தனமும் மூர்த்தியும் கதிரை தடுக்க ஆனால் கதிர் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். கதிர் வீட்டை விட்டு வெளியேறினால் நான் பேசவே மாட்டேன் என மூர்த்தி சொல்ல ஆனால் கதிர் கேட்காமல் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அதனால் மனம் உடைந்த மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. உடனே ஜீவா தனம் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அப்போது மூர்த்திக்கு உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சொல்ல மீனாவின் அப்பா பணம் கொடுத்து உதவி செய்கிறார்.
இந்நிலையில் கதிருக்கு கண்ணன் போன் செய்து விவரத்தை சொல்கிறார். உடனே பதறி போன கதிர் மூர்த்தியை பார்க்க முல்லை உடன் வருகிறார். அப்போது எல்லாம் என்னால் தான் என கதிர் தனத்திடம் அழ நீ வீட்டிற்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். ஆனால் கதிர் என்னுடைய முடிவை நான் அப்பவே சொல்லிவிட்டேன் என சொல்ல தனம் கதிரை வெளியே போக சொல்கிறார். உடனே கோவப்பட்ட மீனாவின் அப்பாவும் கதிரை வெளியே போக சொல்லி சொல்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.