தமிழகத்தில் தங்கத்தை காட்டிலும் அதி வேகத்தில் உயரும் காய்கறிகளின் விலை – இன்றைய பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒவ்வொரு நாளும் காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
காய்கறிகளின் விலை:
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் ஒவ்வொரு நாளும் காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெண்டைக்காயை தவிர அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இன்றைக்கும் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் என்னென்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. முதலாவதாக, பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ. 30-க்கும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும், தக்காளி ரூ. 15 க்கும், பச்சை மிளகாய் ரூ.35 க்கும், உருளைக்கிழங்கு ரூ. 30-க்கும், பீட்ரூட் ரூ. 25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் 30000 காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப கோரிக்கை!
இதனையடுத்து, முட்டைக்கோஸ் ரூ.10க்கும், பட்டர் பீன்ஸ் கிலோ ரூ.90க்கும், சுரைக்காய் கிலோ ரூ.20க்கும், பாகற்காய் கிலோ ரூ.30க்கும், குடமிளகாய் ரூ. 35க்கும், வாழைப்பூ கிலோ ரூ.250க்கும், பீன்ஸ் ரூ. 80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று சென்னை கோயம்பேடு சந்தையில் இஞ்சி விலை ரூ. 250க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 40 அதிகரித்து கிலோவுக்கு ரூ. 290 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 7 ஆம் தேதி வரையிலும் கனமழை நீட்டிக்கலாம் என வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.