3 மாவட்டங்களில் மே 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மூன்று பெரிய மாநிலங்களில் முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் பாதிப்பே 4 லட்சத்திற்கு அதிகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மூன்று முக்கிய மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு மே 10 ஆம் தேதி வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் படி டெஹ்ராடூன், உதம் சிங் நகர் மற்றும் ஹரித்வார் ஆகிய மூன்று பெரிய மாவட்டங்களில் மே 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்? வலுக்கும் பரிந்துரைகள்!!
மற்ற மாவட்டங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு மே 10 வரை அமலில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மளிகை, பால், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.