நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்? வலுக்கும் பரிந்துரைகள்!!
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அடுத்து 2 அல்லது 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க மத்திய மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்று பாதிப்பு மாறுபடுகிறது. இதனால் கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றனர். இதனால் முழு ஊரடங்கு அறிவிப்பு மட்டுமே கொரோனா சங்கிலியை உடைக்கும் என மருத்துவ நிபுணர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை வல்லுநர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகையில்,கடந்த ஆண்டை போல முழு ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுப்பு – இணைய சேவை முடக்கம்!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி கூறுகையில்,” இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய முழு ஊரடங்கை அடுத்த 2 வாரங்கள் அல்லது 4 வாரங்களுக்கு அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டை போல அதிரடியாக அல்லாமல் பிரதமர் மோடி துரிதமாக ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்பது அனைத்து நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்