ஜூலை 20 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – உத்தரகண்ட் அரசு அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் முழு ஊரடங்கு உத்தரவை ஜூலை 20 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இவ்வகையான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முசோரி மற்றும் நைனிடால் உள்ளிட்ட மலை வாழிடங்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளால், நோய் தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிப்பில் வரும் 20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!
உத்தரகண்ட்டில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளில், அனைத்து பயிற்சி நிறுவனங்களும் 50% மாணவர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுள்ளன. வணிக மற்றும் தனியார் நிறுவனங்களும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
TNUSRB காவலர் பணி உடற்தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி – இன்று முதல் தொடக்கம்!
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூன் மற்றும் நைனிடால் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். மேலும் இந்த இரு மாவட்டங்களில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இப்பகுதிகளுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை முறையாக கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.