TNUSRB காவலர் பணி உடற்தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி – இன்று முதல் தொடக்கம்!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 26 முதல் 40 மையங்களில் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ள நிலையில் அதற்கான பயிற்சிகள் வழங்க காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
காவலர் பணி பயிற்சிகள்:
தமிழகத்தில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். 11,741 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியிடப்பட்டன.
NEET UG 2021 தேர்வு தேதி அறிவிப்பு – இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு கடந்த மார்ச் 8 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஜூலை 26 முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடக்க உள்ளதாக சீருடை பணியாளர் தலைவர் சீமா அகர்வால் அறிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக போதிய பயிற்சி இல்லாமல் பலர் உள்ளனர். அவர்களுக்கு காவலர் பணி கனவாக உள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!
எனவே அவர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கில் இன்று முதல் 23 ஆம் தேதி வரை உடல்தகுதி தேர்வுக்காக பயிற்சி வழங்கப்பட உள்ளது, ஓட்டப்பயிற்சி, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் பயிற்சியை தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை இலவசமாக காவல்துறையினரே வழங்க உள்ளனர். இதற்காக மதுரையில் மாவட்ட ஆயுதப்படை மைதானம், அரசு ஆண்கள் பள்ளி மேலூர், பி.கே.என் ஆண்கள் பள்ளி திருமங்கலம், அரசு ஆண்கள் பள்ளி உசிலம்பட்டி, விவேகானந்தா கல்லூரி திருவேடகம், காந்திஜி அரசு பள்ளி பேரையூர் ஆகிய இடங்களில் பயிற்சி நடைபெறுகிறது.