முழு ஊரடங்கு மே 6 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
முழு ஊரடங்கு மே 6 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு மே 6 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு மே 6 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக உள்ளதால் ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவு மே 6 ஆம் தேதி வரை நீடிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த ஆண்டை விட மிக வேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் தினமும் 3000க்கு அதிகமாக பதிவாகி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 49% சதவிகிதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆகும். உத்தர பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் நிலைமையை சரி செய்ய ஏற்கனவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா – ஆளுநருக்கு கடிதம்!!

மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும், மளிகை, காய்கறி, மருந்து கடைகள், பால் போன்ற கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு மே 4 ஆம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், நிலைமையை சரி செய்ய மேலும் நீட்டித்து மே 6 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!