இரவுநேர ஊரடங்கு 4 மணிநேரம் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
இரவுநேர ஊரடங்கு 4 மணிநேரம் நீட்டிப்பு - மாநில அரசு
இரவுநேர ஊரடங்கு 4 மணிநேரம் நீட்டிப்பு - மாநில அரசு
இரவுநேர ஊரடங்கு 4 மணிநேரம் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் புதிய பாதிப்பு தினமும் அதிகரித்து வருவதால், திரிபுரா மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கை மேலும் 4 மணி நேரம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இரவுநேர ஊரடங்கு:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக திரிபுரா மாவட்டத்தில் ஏப்ரல் 22 இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை அகர்தலா பகுதிகளில் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தினமும் மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை, மாநிலத்தின் அனைத்து நகராட்சி பகுதிகளிலும் நடைமுறையில் இருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு மே 6 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

திரிபுராவில் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அகர்த்தலா சட்டத்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கின் போது மருத்துவ சேவைகள், காவல்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் அம்மாநிலத்தில் சமூக, அரசியல், கல்வி, கலாச்சார திருவிழா, விளையாட்டு, பொழுதுபோக்கு தொடர்பான பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து திருமண விழாக்களில் 100 நபர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், இறுதிச்சடங்குகளில் 20 நபர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும், சினிமா திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!