தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா – ஆளுநருக்கு கடிதம்!!
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தற்போது முதல்வர் பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
முதல்வர் பதவி ராஜினாமா:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவிய நேரத்தில் மிகவும் பாதுகாப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதன் முடிவில் திமுக அதிகளவு பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
TN Job “FB Group” Join Now
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்த திமுக.,விற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் கொரோனா காரணமாக பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற உள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக புதிய பதிவாளர் நியமனம் – ஒருங்கிணைப்பு குழு தலைவர் உத்தரவு!!
அதிமுக தோல்வியை தழுவியதால், முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி இன்று ராஜினாமா செய்தார். மேலும் அவரது ராஜினாமா கடிதத்தை தற்போதைய ஆளுநர் பன்வாரியால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடந்த பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்