UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நேர்காணல் அழைப்பு வெளியீடு!
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் துணை இயக்குநர் பதவிக்கான நேர்காணலுக்கான அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது.
UPSC தேர்வர்கள்:
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் 151 துணை இயக்குநர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணலுக்கு தேர்வு செய்யப்ட்டுள்ளவர்களின் பட்டியல் அதிகாரபூர்வ தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
PAN CARDல் திருத்தங்களை ஆன்லைன் மூலமாக எளிமையாக செய்வது எப்படி? – முழு விவரம் இதோ!
இவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தின் படி UPSC அலுவலகம், தோல்பூர் மாளிகை, ஷாஜகான் சாலை, புது தில்லி – 110 069.என்ற முகவரியில் நேர்முகத்தேர்வில் சென்று கலந்து கொள்ள வேண்டும். மேலும், நேர்காணலுக்கு செல்லும்போது அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை கட்டாயம் உடன் எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.