UPSC CAPF தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – நேர்காணல் விவரங்கள் வெளியீடு!
UPSC CAPF தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான நேர்காணல் விவரங்கள் தற்போது UPSC இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
UPSC CAPF:
இந்தியாவில் மத்திய ஆயுத காவல் படை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய UPSC தேர்வாணையம் CAPF தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு 253 காலியிடங்களுக்கான UPSC CAPF தேர்வுக்கான அறிவிப்பு 2022 ஏப்ரல் மாதம் வெளியானது. அதனை தொடர்ந்து தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதனையடுத்து எழுத்து தேர்வானது ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடைபெற்றது.
திருப்பதி கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான சேவா டிக்கெட் – ஜூன் 21 முதல் ஆன்லைனில் முன்பதிவு!
இந்த தேர்வின் முடிவுகள் செப்டம்பர் – 16ம் தேதி இணையதளத்தில் வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் 2023 ஜூலை 3ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என்று தற்போது UPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் நேர்காணலுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட முழு விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://www.upsc.gov.in/ என்ற இனையதளம் வாயிலாக விவரங்களை அறியலாம்.