திருப்பதி கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான சேவா டிக்கெட் – ஜூன் 21 முதல் ஆன்லைனில் முன்பதிவு!
உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் தரிசனம் செய்ய டிக்கெட் வருகிற 21 ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
டிக்கெட் வெளியீடு
ஆந்திர மாநிலம் திருப்பதியில் எழுமையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். மேலும் இங்கு தினமும் ஆர்ஜித சேவாக்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் முன்னதாகவே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவாக்களுக்கான ஆன்லைனில் முன்னதாக பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். அதன் பின் தேவஸ்தானம் குழுக்கள் முறையில் தேர்வு செய்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.ரூ.80,250/- ஊதியம்!
இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ஆகிய டிக்கெட்டுகள் ஜூன் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான குலுக்கல் வருகிற 21 ஆம் தேதி பகல் 12மணிக்கு நடைபெறும் எனவும், தேர்வு செய்யப்பட்டவர்கள் பணம் செலுத்தி உறுதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம், செப்டம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்றவற்றுக்கான டிக்கெட் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.