UPPSC தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
உத்திர பிரதேச மாநிலத்தில் ஒருங்கிணைந்த மாநில சேவைகளுக்கான தேர்வுகள் மே மாதம் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேர்வுகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மாநிலங்கள் தோறும் நடத்தப்பட வேண்டிய பள்ளி, கல்லூரி தேர்வுகள், பல்கலைக்கழக தேர்வுகள், அரசு பணிக்கான தேர்வுகள் என அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் மே மாதம் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வேளாண் துறையின் துணை முதல்வர் மற்றும் உதவி இயக்குநர் பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக யுபிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் பிசிஎஸ் அல்லது உயர் துணை பதவிகளுக்கான தேர்வு ஜூன் மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கிகள் விடுமுறை வரை – மே 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!!
இந்த தேர்வுக்கான தேதிகளில் எந்தவித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இதன்படி தேர்வுகள் முதல்நிலை, மெயின் மற்றும் நேர்காணல் என்ற மூன்று நிலைகளில் நடத்தப்பட உள்ளது. அதன்படி துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, தொகுதி மேம்பாட்டு அலுவலர், உதவி போக்குவரத்து அலுவலர், உதவி ஆணையர், வீட்டு காவலர்கள், கணக்கு அலுவலர், உதவி ஆணையர் , சிறை கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.