கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கிகள் விடுமுறை வரை – மே 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!!
நாடு முழுவதும் மே 1 ஆம் தேதி முதல் மாற உள்ள பொதுத்துறை மற்றும் நிதி சார்ந்த 5 விஷயங்கள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.
சிலிண்டர் விலை:
வழக்கமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதங்களுக்கான சமையல் எரிவாயு விலையை நிர்ணயம் செய்கிறது. கச்சா எண்ணெய் விலை, எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவை மூலமாக இதன் விலை மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான சமையல் எரிவாய்வு விலை 1 ஆம் தேதி அன்று வெளியிடப்படும். தற்போது கொரோனா தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சிலிண்டர் விலை குறைக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
ஆக்ஸிஸ் பேங்க்:
Axis Bank வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான முக்கிய விதியை ஆக்ஸிஸ் பேங்க் மாற்றியுள்ளது. ஏற்கனவே இருந்த ரூ.10000 மினிமம் பேலன்ஸ் தொகையை தற்போது ரூ.15000 மாக உயர்த்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் மே 1 ஆம் தேதி வரை 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான ஆன்லைன் பதிவு போன்ற பல்வேறு விதிமுறைகளை மாற்றியுள்ளது.
மே 3 முதல் ஜூன் 6 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
காப்பீடு தொகை:
கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் காப்பீட்டு ஒழுங்குறை ஆணையம் (IRDAI) பொதுமக்களுக்கான காப்பீட்டு தொகையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மே 1 ஆம் தேதி முதல் ஆரோக்யா சஞ்சீவனி பாலிசியின் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொகை ரூ.5 லட்சமாக இருந்தது.
SBI வங்கியில் 5000 எழுத்தர் காலிப்பணியிடங்கள் – மே 17க்குள் விண்ணப்ப பதிவு!!
வங்கிகள் விடுமுறை:
வருகிற மே மாதம் வங்கிகள் 12 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. இந்த விடுமுறை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது, அந்தந்த மாநிலங்களுக்கு உள்ள உள்ளூர் விடுமுறை நாட்களை கணக்கீட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.