தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சீருடை – அமைச்சர் செல்லூர் ராஜு அறிவிப்பு!!
தமிழகத்தில் செயல்படும் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்து உள்ளார். மேலும் பணி நேரத்தில் ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்து உள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் மொத்தம் 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் 21,600 விற்பனையாளர்கள் மற்றும் 3,800 எடையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு சார்பில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்ட ரூ.1000 நிதியுதவி, பொங்கல் பரிசு என முக்கிய திட்டங்கள் ரேஷன் கடைகள் வாயிலாகவே செயல்படுத்தப்படுகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!
இதனை ஏற்று தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.6000 வரை சம்பள உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.2500 மற்றும் தொகுப்புகள் அடங்கிய பொங்கல் பரிசு ஜனவரி 4ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக டோக்கன் வழங்கல், நிதி ஒதுக்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குரூப் 1 தேர்வுக்கான புதிய நடைமுறைகள் – TNPSC தலைவர் அறிவிப்பு!!
இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்பட உள்ளதாக கூறி உள்ளார். கடைகளில் பணியில் இருக்கும் பொழுது ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்