மருத்துவ தாவரங்களுக்கான புதிய கூட்டமைப்பு – மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவிப்பு!!
மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு கீழ் செயல்பட்டு வரும் தேசிய மருத்துவ தாவர வாரியம் தற்போது புதிதாக மருத்துவ தாவரங்களுக்கான கூட்டமைப்பினை உருவாகியுள்ளது.
மருத்துவ மூலிகை தாவரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், இது குறித்த ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வுக்கான புதிய நடைமுறைகள் – TNPSC தலைவர் அறிவிப்பு!!
மருத்துவ தாவரங்களின் விநியோக சங்கிலி மற்றும் ஆலைகளின் மதிப்பினை அதிகரிப்பதே இந்த கூட்டமைப்பின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தாவரங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் அதனை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மத்தியில் ஒரு நல்ல புரிதலையும் ஏற்படுத்தவும் இது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சகம்:
மத்திய ஆயுஷ் அமைச்சகம் நவம்பர் 9, 2014 அன்று உருவாக்கப்பட்டது. இதன் மாநில அமைச்சராக ஸ்ரீபாத் நாயக் உள்ளார். இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. இந்த அமைச்சகத்திற்கு கீழ் தேசிய மருத்துவ தாவர வாரியம் செயல்பட்டு வருகின்றது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்